< Back
இளைஞர் மலர்
வங்கியில் 8812 பணி இடங்கள்
இளைஞர் மலர்

வங்கியில் 8812 பணி இடங்கள்

தினத்தந்தி
|
11 Jun 2023 9:30 AM GMT

வங்கியில் ஏற்படும் காலி பணி இடங்களை போட்டித்தேர்வு மூலம் நிரப்பும் வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐ.பி.பி.எஸ்) சார்பில் உதவி மானேஜர், மார்க்கெட்டிங் ஆபீசர், கருவூல அதிகாரி, அலுவலக உதவியாளர்கள் உள்பட 8812 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

சம்பந்தப்பட்ட துறை சார்ந்த பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கம்ப்யூட்டர் பற்றிய அடிப்படை அறிவு பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும். சில பணி இடங்களுக்கு பணி அனுபவம் பெற்றிருப்பதும் அவசியமானது.

1-6-2023 அன்றைய தேதிப்படி அலுவலக உதவியாளர் பணிக்கு 18 முதல் 28 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

உதவி மானேஜர் பதவிக்கு 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களும், மானேஜர் பதவிக்கு 21 முதல் 32 வயதுக்குட்பட்டவர்களும், சீனியர் மானேஜர் பதவிக்கு 21 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.

அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு. எழுத்து தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வுகள் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் நடைபெறும். தமிழகத்தை பொறுத்தவரை முதல் நிலை தேர்வுக்கு, சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் ஆகிய இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்படும்.

மெயின் தேர்வு சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், திருநெல்வேலி ஆகிய இடங்களில் நடைபெறும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21-6-2023.

விண்ணப்பிக்கும் விதம் பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்வதற்கு https://www.ibps.in/crp-rrb-xii என்ற இணைய பக்கத்தை பார்வையிடலாம்.

மேலும் செய்திகள்