< Back
வானிலை
6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு
வானிலை

6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு

தினத்தந்தி
|
21 Sep 2024 4:55 AM GMT

மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னை,

மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்து வந்தாலும், சில இடங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. இந்த நிலையில், தமிழகத்தின் 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, திருவள்ளூர், சென்னை, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்