< Back
கிரிக்கெட்
விம்பிள்டன் டென்னிஸ் தொடரை நேரில் கண்டு களித்த இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின்
கிரிக்கெட்

விம்பிள்டன் டென்னிஸ் தொடரை நேரில் கண்டு களித்த இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின்

தினத்தந்தி
|
6 July 2024 1:56 PM GMT

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.

லண்டன்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பல முன்னணி, வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதில் நடைபெற்று வரும் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) - கேமரூன் நோரி (இங்கிலாந்து) விளையாடி வருகின்றனர்.

இந்த போட்டியை நேரில் காண இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சென்றுள்ளார். அப்போது அவரை டென்னிஸ் கோர்ட்டில் அறிமுகப்படுத்தியபோது எழுந்து நின்று கை அசைத்தார்.


மேலும் செய்திகள்