< Back
டென்னிஸ்
டென்னிஸ்
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: பெண்கள் ஒற்றையர் பிரிவில் சபலென்கா சாம்பியன்
|19 Aug 2024 8:28 PM GMT
இறுதிப்போட்டியில் சபலென்கா - பெகுலா ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.
சின்சினாட்டி,
பல முன்னணி வீராங்கனைகள் பங்கேற்றிருந்த சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டிக்கு அரினா சபலென்கா (பெலாரஸ்) மற்றும் ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) ஆகியோர் தகுதி பெற்றனர். இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.
இதில் தொடக்கம் முதலே சிறப்பாக செயல்பட்ட சபலென்கா 6-3 மற்றும் 7-5 என்ற நேர் செட் கணக்கில் பெகுலாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.