< Back
கிரிக்கெட்
பஞ்சாப்புக்கு எதிரான தோல்விக்கு சுப்மன் கில்தான் காரணம் - இந்திய முன்னாள் வீரர்

Image Courtesy: @IPL / @gujarat_titans

கிரிக்கெட்

பஞ்சாப்புக்கு எதிரான தோல்விக்கு சுப்மன் கில்தான் காரணம் - இந்திய முன்னாள் வீரர்

தினத்தந்தி
|
26 March 2025 3:38 PM IST

சுப்மன் கில்லின் மோசமான கேப்டன்சியால்தான் குஜராத் தோல்வியை சந்தித்தது என சேவாக் கூறியுள்ளார்.

அகமதாபாத்,

ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 243 ரன்கள் குவித்தது. பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 97 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து 244 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த குஜராத் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 232 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 11 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் திரில் வெற்றி பெற்றது. குஜராத் தரப்பில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 74 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது ஸ்ரேயாஸ் ஐயருக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், இந்த ஆட்டத்தில் குஜராத் அணி தோல்வியை சந்திக்க சுப்மன் கில் தான் காரணம் என இந்திய முன்னாள் வீரர் சேவாக் கூறியுள்ளார். அவரது மோசமான கேப்டன்சியால்தான் குஜராத் தோல்வியை சந்தித்தது எனவும் கூறியுள்ளார். இது தொடர்பாக சேவாக் கூறியதாவது,

இந்த போட்டியில் குஜராத் அணி தோல்வியை சந்திக்க முழு காரணமும் சுப்மன் கில் தான். அவரது மோசமான கேப்டன்சியால் தான் குஜராத் தோல்வியை சந்தித்திருக்கிறது. ஏனெனில், இந்தப் போட்டியின் போது பவர்பிளே ஓவர்களில் முகமது சிராஜை பயன்படுத்தி இருக்க வேண்டும். முகமது சிராஜ் புதுப்பந்தில் சிறப்பாக செயல்படக்கூடியவர். ஆனால் அவரை பாதியிலேயே நிறுத்தி விட்டு அர்ஷத் கானை கொண்டு வந்தார்.

அர்ஷத் கான் வந்ததும் அந்த ஓவரில் 21 ரன்கள் சென்றது. அதேபோன்று டெத் ஓவர்களில் மிகச் சிறப்பாக பந்து வீசக்கூடிய ரபாடாவை முன்கூட்டியே கொண்டு வந்து மூன்று ஓவர்கள் வீசவைத்தும் தவறு செய்து விட்டார். ரபாடா இறுதி நேரத்தில் பந்துவீச முடியாமல் போனதால் முகமது சிராஜ் அந்த இடத்தில் நிறைய ரன்களை வழங்கினார்.

இப்படி எந்த பவுலரை எங்கு வீசவைக்க வேண்டும் என்று அவருக்கு தெரியவில்லை. இதனால் தான் சொல்கிறேன் சுப்மன் கில் கேப்டன் பதவிக்கு இன்னும் முழுமையாக தயாராகவில்லை. மேலும், அவர் கேப்டன்சி திறனையும் இன்னும் முன்னேற்றிக் கொள்ளவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்