< Back
கிரிக்கெட்
இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற பிறகுதான் கொண்டாடுவோம் - ஆட்டநாயகன் ஷபாஸ் அகமது

Image Courtesy: AFP

கிரிக்கெட்

இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற பிறகுதான் கொண்டாடுவோம் - ஆட்டநாயகன் ஷபாஸ் அகமது

தினத்தந்தி
|
25 May 2024 1:12 AM GMT

இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற பிறகுதான் கொண்டாடுவோம் என ஆட்டநாயகன் ஷபாஸ் அகமது கூறினார்.

சென்னை,

சென்னையில் நேற்று நடைபெற்ற 2வது தகுதிசுற்று ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. ஐதராபாத் தரப்பில் கிளாசென் 50 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் பவுல்ட், அவேஷ் கான் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து 176 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் அணி ஐதராபாத்தின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 20 ஓவர்கள் முழுமையாக பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 36 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

ராஜஸ்தான் தரப்பில் துருவ் ஜூரெல் 56 ரன் எடுத்து களத்தில் இருந்தார். ஐதராபாத் தரப்பில் ஷபாஸ் அகமது 3 விக்கெட், அபிஷேக் சர்மா 2 விக்கெட் வீழ்த்தினர். ஐதராபாத் அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய ஷபாஸ் அகமதுவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது,

சூழ்நிலைகளுக்கு தகுந்தார் போல் உன்னை பயன்படுத்துவோம் என்று கேப்டனும், பயிற்சியாளரும் என்னிடம் கூறியிருந்தனர். பேட்டிங்கில் லோயர் ஆர்டரில் விளையாடுவதே என்னுடைய வேலையாகும். ஒருவேளை ஆரம்பத்திலேயே சரிவு ஏற்பட்டால் என்னை பயன்படுத்துவோம் என்று அணி நிர்வாகம் சொன்னார்கள்.

பேட்டிங் செய்யும் போது பிட்ச்சில் ஏதோ இருப்பதாக நான் உணர்ந்தேன். குறிப்பாக அவேஷ் கான், சந்தீப் சர்மா ஆகிய ராஜஸ்தான் வீரர்களின் பவுலிங் அதை காண்பித்தது. இந்த முக்கியமான போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்றதை பெருமையாக உணர்கிறேன். எங்களுடைய அணி மிகவும் ரிலாக்ஸாக இருக்கிறது. இறுதிப்போட்டியில் கோப்பையை வென்ற பின்பே நாங்கள் கொண்டாடுவோம். எனவே இன்றிரவு நாங்கள் ஓய்வு எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்