< Back
கிரிக்கெட்
டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் அணியாக மாபெரும் உலக சாதனை படைத்த இந்தியா

image courtesy: twitter/@BCCI

கிரிக்கெட்

டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் அணியாக மாபெரும் உலக சாதனை படைத்த இந்தியா

தினத்தந்தி
|
11 July 2024 2:16 AM GMT

ஜிம்பாப்வேவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது.

ஹராரே,

ஜிம்பாப்வேவுக்கு சென்றுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 போட்டிகள் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது ஆட்டம் ஹராரேவில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் 'டாஸ்' ஜெயித்த இந்திய கேப்டன் சுப்மன் கில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கில் 66 ரன்களும், கெய்க்வாட் 49 ரன்களும் அடித்தனர். ஜிம்பாப்வே தரப்பில் சிகந்தர் ராசா, முஜரபானி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன்மூலம் 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

ஜிம்பாப்வே அணியில் அதிகபட்சமாக டியான் மயர்ஸ் 65 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளும், ஆவேஷ்கான் 2 விக்கெட்டுகளும், கலீல் அகமது ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இந்த வெற்றி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியாவின் 150-வது வெற்றியாக பதிவானது. இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் 150 வெற்றி பெற்ற முதல் அணி என்ற மாபெரும் உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது. இந்தியாவிற்கு அடுத்த இடத்தில் பாகிஸ்தான் 142 வெற்றிகளுடன் உள்ளது.

மேலும் செய்திகள்