< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கீடு
நாடாளுமன்ற தேர்தல்-2024

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கீடு

தினத்தந்தி
|
21 March 2024 3:43 PM GMT

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது .வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில் இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியுள்ளது. தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் முழு வீச்சில் தயாராகி வருகின்றன.

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் ஜி.கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னத்த்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது.தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

மேலும் செய்திகள்