< Back
மாநில செய்திகள்

மாநில செய்திகள்
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற தொழிலாளி கைது

15 March 2025 5:32 AM IST
சிறுமியை தொழிலாளி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
திருச்சி ,
திருச்சி மாவட்டம் பெரிய கருப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது 40). கூலித் தொழிலாளி. இவர் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் குளித்தலை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.