
மும்மொழிக் கொள்கையில் என்ன இருக்கிறது?; அவ்வளவு ரோஷம் இருந்தால்.... சீமான் ஆவேசம்

மும்மொழிக் கொள்கையில் என்ன இருக்கிறது? என்று சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
அவிநாசி,
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
இந்தியா ஒரே தேசியம் அல்ல. அது பல தேசங்களின் ஒன்றியம். பல மொழி பேசும், பல்வேறு இன மக்கள் வாழும் இந்த நாட்டில் ஒவ்வொரு மொழிக்கும் கலை, கலாச்சாரம், மொழி, வழிபாடு வெவ்வேறாக உள்ளது. பல மொழிகள் என்றால் இந்தியா ஒரே நாடாக இருக்கும்.. ஒரே மொழி என்றால் பல நாடுகள் பிறக்கும்.
தமிழகத்துக்குள்ளும் பல்வேறு சாதி, குடி கட்டமைப்புகள் உள்ளன. அனைத்து மக்களின் மொழி வழி தேசியத்துக்கும், முன்னுரிமை தரப்பட வேண்டும். அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுரிமை தரப்பட வேண்டும் என அம்பேத்கர் சொல்லியிருக்கிறார்.
மும்மொழிக் கொள்கையில் என்ன இருக்கிறது?. புதிய கல்விக் கொள்கை கட்டாயமாக இந்தி மொழியைக் கற்கச் சொல்கிறது. பிரதமருக்கும், அமைச்சர்களுக்கும் தேர்வு வைத்து தேர்வு செய்யப்பட வேண்டும் என்றால் அதை ஏற்றுக் கொள்வார்களா?. பல மொழி இனத்தை அழித்து ஒரே தேசமாக கட்டமைக்க முயற்சி நடக்கிறது.
இந்தியாவில் 22 மொழிகள் ஆட்சி மொழியாக இருந்தால் என்ன? வரியை மட்டும் பெற்றுக் கொள்கின்றனர்? ஆனால் அங்கிருந்து கடிதம் அனுப்பும்போது இந்தியில் அனுப்புகின்றனர்? அவ்வளவு ரோஷம் இருப்பவர்கள் தமிழ்நாட்டின் வரியை ஏன் பெறுகிறீர்கள்? கட்டாயமாக இந்தியை படிக்கச் சொல்வது சரியல்ல. பிரித்தாளும் சூழ்ச்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது விருப்பம் உள்ளோர் இந்தியை கற்றுக் கொள்ளட்டும் எதற்கு திணிக்க வேண்டும்?. இவ்வாறு அவர் கூறினார்.