< Back
மாநில செய்திகள்

சென்னை
மாநில செய்திகள்
'இந்த இந்த ஊர்களுக்கு எல்லாம் பஸ் போகும் என்பது போல் உள்ளது' - பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு

21 March 2025 11:31 AM IST
பஸ் ஸ்டான்டில் கண்டெக்டர் சொல்லுவார் இந்த இந்த ஊர்களுக்கு எல்லாம் பஸ் போகும் என்பது போல் உள்ளது பேரவைத் தலைவர் அப்பாவு கூறினார்.
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, உறுப்பினர் ஸ்டாலின் குமார் : துறையூர் தொகுதியில் அம்மாபட்டி, காளிபட்டி பெத்துபட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு விடியல் பயண திட்டதின் கீழ் புதிய வழித்தடத்தில் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கபடுமா? என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது பேசிய, பேரவைத் தலைவர் அப்பாவு, பஸ் ஸ்டான்டில் கண்டெக்டர் சொல்லுவார் இந்த இந்த ஊர்களுக்கு எல்லாம் பஸ் போகும் என்பது போல் உள்ளதாக கூறினார்.
இதனைத் தொடர்ந்து பதில் அளித்த அமைச்சர் சிவசங்கர், நேரில் ஆய்வு செய்து, அனைத்து பட்டிகளுக்கும் விடியல் பயணத் திட்டத்தின் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.