< Back
மாநில செய்திகள்
ஜெயலலிதாவின் பெரும்புகழைப் போற்றி வணங்குகிறேன்: எடப்பாடி பழனிசாமி
மாநில செய்திகள்

ஜெயலலிதாவின் பெரும்புகழைப் போற்றி வணங்குகிறேன்: எடப்பாடி பழனிசாமி

தினத்தந்தி
|
24 Feb 2025 8:42 AM IST

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்தநாளை ஒட்டி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் தெரிவித்து இருப்பதாவது;

"மக்களால் மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட தன் தவ வாழ்வால் உலகெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளங்களில் எல்லாம் இன்றும், என்றும் குடியிருக்கும் உன்னதத் தாய், தமிழ்நாட்டு மக்கள் வாழ்வு வளம்பெறும் வகையிலான தனது மக்கள் நலத் திட்டங்களின் செயல்பாட்டால் மக்களால் "அம்மா" என்று அன்புடன் அழைக்கப்பெறும் நம் ஒப்பற்றத் தலைவி, புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளில், அவரது பெரும்புகழைப் போற்றி வணங்குகிறேன்.

"எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அதிமுக மக்களுக்காகவே இயங்கும்" என்று ஜெயலலிதா சூளுரைத்த அந்த வெற்றி முழக்கத்தை, கொள்கைப் பிரகடனத்தை செயல்படுத்திட நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டிய நாள் தான் ஜெயலலிதாவின் பிறந்தநாள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான சிறப்பு மிக்க வெற்றிக் கூட்டணி அமையப் போகிறது. வியக்கத்தக்க வெற்றிகளை நாம் பெறப்போகிறோம். அதற்கேற்ப அயராது உழைப்போம்! அம்மாவின் உண்மைத் தொண்டர்களாகப் பணியாற்றுவோம்!"

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்