
கொலை செய்ய சதி என ஏடிஜிபி கல்பனா நாயக் அளித்த புகார்: டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்

ஏடிஜிபி கல்பனா நாயக் அறையில் ஏற்பட்ட தீ விபத்து திட்டமிடப்பட்ட செயல் இல்லை என்று டிஜிபி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை,
சென்னை எழும்பூரில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த தீ விபத்தை சுட்டிக்காட்டிய ஏ.டி.ஜி.பி., கல்பனா நாயக் சப் இன்ஸ்பெக்டர் தேர்வில் இட ஒதுக்கீடு வழங்கியதில் முரண்பாடு இருப்பதாக தான் புகார் தெரிவித்ததால் தம்மை கொல்ல சதி நடந்ததாக குற்றம் சாட்டி இருந்தார்.
இந்நிலையில் கல்பனா நாயக்கின் குற்றச்சாட்டுக்கு டிஜிபி அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டிஜிபி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஏடிஜிபி கல்பனா நாயக் அறையில் ஏற்பட்ட தீ விபத்து திட்டமிடப்பட்ட செயல் இல்லை. அலுவலகத்தில் தீ விபத்து நடந்தவுடன் டிஜிபி அலுவலகத்தில் ஏடிஜிபி கல்பனா நாயக் புகார் அளித்தார். தீ விபத்து குறித்து எழும்பூர் போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. தடயவியல் நிபுணர்கள், தீயணைப்புத்துறை, மின் துறை ஆகியோரிடம் தீ விபத்து தொடர்பாக விளக்கம் பெற்றுள்ளோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.