
சென்னை: மின்சார ரெயில் சேவையில் மாற்றம்

பராமரிப்பு பணிகள் காரணமாக புறநகர் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
சென்னை,
சென்னையில் முக்கிய போக்குவரத்தாக மின்சார ரெயில் போக்குவரத்து இருந்து வருகிறது இந்த ரெயில் போக்குவரத்தை தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சென்னை கடற்கரை- தாம்பரம்-செங்கல்பட்டு, சென்னை கடற்கரை - வேளச்சேரி மற்றும் சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி இடையே புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தெற்கு ரெயில்வே சார்பில் அவ்வப்போது பராமரிப்பு பணிகள் நடைபெறும்போது புறநகர் மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், சென்னை - கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் பொன்னேரி மற்றும் கவரப்பேட்டை இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக புறநகர் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு;
"சென்னை - கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் பொன்னேரி மற்றும் கவரப்பேட்டை இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக வரும் 16, 19 மற்றும் 21 ஆகிய தேதிகளில் சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி உட்பட 25 புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. பயணிகள் வசதிக்காக இந்த நாட்களில் மட்டும் சென்ட்ரல் - பொன்னேரி இடையே 10 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.