< Back
மாநில செய்திகள்
சென்னை: மின்சார ரெயில் சேவையில் மாற்றம்
மாநில செய்திகள்

சென்னை: மின்சார ரெயில் சேவையில் மாற்றம்

தினத்தந்தி
|
14 Feb 2025 8:37 PM IST

பராமரிப்பு பணிகள் காரணமாக புறநகர் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

சென்னை,

சென்னையில் முக்கிய போக்குவரத்தாக மின்சார ரெயில் போக்குவரத்து இருந்து வருகிறது இந்த ரெயில் போக்குவரத்தை தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சென்னை கடற்கரை- தாம்பரம்-செங்கல்பட்டு, சென்னை கடற்கரை - வேளச்சேரி மற்றும் சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி இடையே புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தெற்கு ரெயில்வே சார்பில் அவ்வப்போது பராமரிப்பு பணிகள் நடைபெறும்போது புறநகர் மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், சென்னை - கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் பொன்னேரி மற்றும் கவரப்பேட்டை இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக புறநகர் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு;

"சென்னை - கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் பொன்னேரி மற்றும் கவரப்பேட்டை இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக வரும் 16, 19 மற்றும் 21 ஆகிய தேதிகளில் சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி உட்பட 25 புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. பயணிகள் வசதிக்காக இந்த நாட்களில் மட்டும் சென்ட்ரல் - பொன்னேரி இடையே 10 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்