< Back
மாநில செய்திகள்
தொகுதி மறுசீரமைப்பு பெயரில் மாநில உரிமைகளை பறிக்க முயற்சி: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
மாநில செய்திகள்

தொகுதி மறுசீரமைப்பு பெயரில் மாநில உரிமைகளை பறிக்க முயற்சி: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
3 March 2025 11:43 AM IST

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அனைவரும் வரவேண்டுமென முதல்-அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

நாகப்பட்டினம்,

நாகையில் திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது விழா மேடையில் தொகுதி மறுசீரமைப்பு குறித்து அவர் பேசியதாவது;

"தொகுதி மறுசீரமைப்பு பெயரில் மாநில உரிமைகளை பறிக்க மத்திய பாஜக அரசு முயற்சி செய்கிறது. தமிழக எம்.பி.க்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் தொகுதி மறுசீரமைப்பு நடைபெற உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 40 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன.

சில கட்சிகள், நாங்கள் வர வாய்ப்பில்லை.. வர முடியாது என கூறியுள்ளன. அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு வர முடியாது என்று கூறுபவர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். இது தனிப்பட்ட கட்சி பிரச்சினையோ, திமுக பிரச்சினையோ கிடையாது. இது தமிழ்நாட்டின் பிரச்சினை. இது நமது உரிமை. இவன் என்ன அழைப்பது, நாம் என்ன போவது என நினைக்க வேண்டாம். இதை அரசியலாக்க பார்க்காதீர்கள். வர முடியாது என கூறும் கட்சிகள் கண்டிப்பாக வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்."

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்