< Back
மாநில செய்திகள்
போலீஸ் நிலையத்தில் சூதாடிய 5 போலீசார் பணியிடை நீக்கம்
மாநில செய்திகள்

போலீஸ் நிலையத்தில் சூதாடிய 5 போலீசார் பணியிடை நீக்கம்

தினத்தந்தி
|
20 March 2025 6:37 PM IST

போலீஸ் நிலையத்தில் சூதாடிய 5 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டத்தில் வாடி போலீஸ் நிலையம் அமைந்துள்ளது. அங்கு சப்-இன்ஸ்பெக்டராக திருமலேசும், உதவி சப்-இன்ஸ்பெக்டராக முகமது மியானும் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில், முகமது மியான், அந்த போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் சக போலீஸ்காரர்களுடன் சேர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்டார். இதுதொடர்பான வீடியோ, புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது.

இதையடுத்து போலீஸ் நிலையத்தில் வைத்து சூதாடியதாக உதவி சப்-இன்ஸ்பெக்டர் முகமது மியான், ஏட்டுகள் நாகராஜ், சாய் பண்ணா, போலீஸ்காரர்கள் இம்ரான், நாகபூஷண் ஆகிய 5 பேரையும் பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு அட்டூரு சீனிவாசலு அதிரடி உத்தரவிட்டு உள்ளார்.

மேலும் செய்திகள்