< Back
மாநில செய்திகள்
கேரளாவில் அமீபா நுண்ணுயிர் பரவல்; தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
மாநில செய்திகள்

கேரளாவில் அமீபா நுண்ணுயிர் பரவல்; தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

தினத்தந்தி
|
7 July 2024 4:28 PM GMT

கேரளாவில் அமீபா நுண்ணுயிர் பரவி வரும் நிலையில், தமிழக அரசு முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

"கேரளா மாநிலத்தில் அமீபா நுண்ணுயிர் பரவலால் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு மூவர் உயிரிழந்துள்ளதாக வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

கேரளாவில் இந்த நுண்ணுயிர் பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் இத்தகு பரவல்கள் ஏற்படாவண்ணம் முன்னெச்சரிக்கையுடன் அரசு செயல்பட வேண்டும்.

அசுத்தமான நீரின் வாயிலாகவே பரவும் இந்த நுண்ணுயிர், குழந்தைகளை தொற்றும் ஆபத்து அதிகம் உள்ளதால், மக்களின் உயிர்களைக் காக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அதிக கவனத்தை செலுத்துமாறு இந்த தி.மு.க. அரசின் முதல்-அமைச்சரை வலியுறுத்துகிறேன்."

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


மேலும் செய்திகள்