< Back
மாநில செய்திகள்
3-வது முறையாக பிரதமர் பதவியேற்ற மோடிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
மாநில செய்திகள்

3-வது முறையாக பிரதமர் பதவியேற்ற மோடிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து

தினத்தந்தி
|
9 Jun 2024 4:07 PM GMT

நாட்டின் பிரதமராக 3-வது முறையாக மோடி பதவியேற்றுக்கொண்டார்.

புதுடெல்லி,

ஜனாதிபதி மாளிகையில் மோடியின் பதவியேற்பு விழா நடைபெற்றது. அப்போது நாட்டின் பிரதமராக 3-வது முறையாக மோடி பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமானமும் செய்து வைத்தார்.

இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டின் மகிழ்ச்சிகரமான சகோதர, சகோதரிகள் சார்பில், தங்களின் அன்புத் தலைவரும் பிரதமருமான நரேந்திர மோடிக்கு மனமார்ந்த, அன்பான மற்றும் சிறப்பான வாழ்த்துக்களை அன்பான மற்றும் சிறப்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வறுமையற்ற, பிணியில்லாத, கல்வியறிவின்மை போக்க, வீடற்றவர்கள் நிலை மாற மற்றும் பாகுபாடுகள் இல்லாத வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டியெழுப்புவதற்காக நரேந்திர மோடி தனது 3வது ஆட்சிப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

பிரதமருக்கு நாடு முழுவதும் ஒரே குடும்பம் என்பதும், தமிழ்நாட்டு மக்கள் அவரது இதயத்தில் வாழ்கிறார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியும். தமிழ் மக்கள் அவரை நேசிக்கிறார்கள். தங்களின் இதயத்தில் பிரதமர் வாழ்கிறார் என்பதை அவர் அறிய வேண்டும் என விரும்புகிறார்கள். பிரதமரின் தலைமையில் நாடும், மக்களும் மிகவும் பாதுகாப்பாக இருப்பதை அவர்கள் அறிவார்கள். கடவுள் அவருக்கு ஆரோக்கியமான நீண்ட ஆயுளைக் கொடுத்து, தேசத்தின் நலனுக்கான அவரது அனைத்து முயற்சிகளிலும் வெற்றியை வழங்கட்டும்."

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்