< Back
மாநில செய்திகள்
தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - துரை வைகோ வலியுறுத்தல்

கோப்புப்படம்

மாநில செய்திகள்

தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - துரை வைகோ வலியுறுத்தல்

தினத்தந்தி
|
23 Jun 2024 5:39 PM GMT

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் துரை வைகோ எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி. வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலங்கை கடற்படையினரால் ராமேஸ்வரத்தை சேர்ந்த தமிழக மீனவர்கள் 22 பேர் கைது செய்யப்பட்டதோடு, அவர்களின் 3 விசைப்படகுகளும் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த 4 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதோடு, ஒரு விசைப்படகும் சிறை பிடிக்கப்பட்டது.

மத்திய பா.ஜனதா அரசு இந்த பிரச்சினையில் தீவிர கவனம் செலுத்தி, கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், விசைப்படகுகளையும் விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசும், மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து, தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்