திருமணம் தடைபட்டதால் வாலிபர் தற்கொலை
|கோட்டுச்சேரி அருகே திருமணம் தடைபட்ட விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
கோட்டுச்சேரி
திருமணம் தடைபட்ட விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
திருமண ஏற்பாடு
கோட்டுச்சேரி கீழகாசாகுடிமேடு சுனாமி நகரைச் சேர்ந்தவர் வீரம்மாள்-ஆறுமுகம் தம்பதி. இவர்களுக்கு 4 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆறுமுகம், வீரம்மாள் இருவரும் இறந்து விட்டனர்.
இத்தம்பதியரின் கடைசி மகனான ரஞ்சித் (வயது 27). இவர் கீழகாசாகுடிமேட்டில் தாயார் வீரம்மாள் வீட்டில் வசித்து வந்தார். அவருக்கு சமீபகாலமாக திருமணத்துக்கு பெண் பார்த்து வந்துள்ளனர்.
தூக்குப்போட்டு சாவு
பல இடங்களில் பெண் பார்த்தும், அவருக்கு திருமணம் கைகூட வில்லை. தொடர்ந்து திருமணம் தடைபட்டு வந்ததால் ரஞ்சித் விரக்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று படுக்கை அறையில் புடவையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கோட்டுச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.