< Back
புதுச்சேரி
குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை
புதுச்சேரி

குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை

தினத்தந்தி
|
29 Aug 2023 4:07 PM GMT

காரைக்கால் அருகே அக்காள் இறந்த சோகத்தில் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்துக்கொண்டார்.

காரைக்கால்

காரைக்கால் மரியம் அவின்யூவை சேர்ந்தவர் முகமது இசாக். இவருக்கு இஸ்மத் நாச்சியாள் என்ற மகளும், அப்துல் ரகுமான், ஜாகிர் உசேன் (வயது31) என்ற மகன்களும் உள்ளனர். இதில் இஸ்மத் நாச்சியாளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்ட நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உடல்நலக்குறைவால் இறந்துபோனார். அக்காள் மீது அதிக பாசம் வைத்திருந்த ஜாகிர் உசேன், அவரது நினைப்பிலேயே இருந்துவந்தார். அக்காள் சென்ற இடத்துக்கு தானும் செல்லப்போவதாக அடிக்கடி அவர் கூறி வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 22-ந் தேதி ஜாகிர் உசேன், குளிர்பானத்தில் எலி மருந்து (விஷம்) கலந்து குடித்து, வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீ்ட்டு காரைக்காலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிரசிகிச்சை அளித்தும், பலனின்றி ஜாகிர் உசேன் பரிதாபமாக இறந்துபோனார்.

இது குறித்த புகாரின்பேரில் காரைக்கால் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அக்காள் இறந்த வேதனையில் வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்