< Back
புதுச்சேரி
மின்சாரம் தாக்கி காயமடைந்த பெண் சாவு
புதுச்சேரி

மின்சாரம் தாக்கி காயமடைந்த பெண் சாவு

தினத்தந்தி
|
23 July 2023 5:20 PM GMT

சேதராப்பட்டு அருகே மின்சாரம் தாக்கி காயமடைந்த பெண் பரிதாபமாக இறந்தார்.

காலாப்பட்டு

சேதராப்பட்டு அருகே மின்சாரம் தாக்கி காயமடைந்த பெண் பரிதாபமாக இறந்தார்.

மின்சாரம் தாக்கியது

சேதராப்பட்டு அருகே கரசூர் பகுதியை சேர்ந்தவர் தனம். சம்பவத்தன்று துணி துவைத்த இவர், துணிகளை கொடியில் காயபோட்டுள்ளார். அப்போது மேலே சென்ற உயர் அழுத்த மின்கம்பி கொடிகம்பியில் அறுந்து விழுந்தது.

இதனால் மின்சாரம் தாக்கி தனம் சுருண்டு விழுந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மகள் பிரியதர்ஷினி ஓடி வந்து தாயாரை காப்பாற்ற முயன்றார். அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. மேலும் அதே பகுதியை சேர்ந்த வீரம்மாள் (வயது43), காந்தலட்சுமி ஆகியோர் பதறியடித்து ஓடிவந்தபோது, அவர்கள் மீதும் அறுந்து கிடந்த மின்கம்பி பட்டதால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டனர்.

சிகிச்சை பலனின்றி சாவு

மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்த 4 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு வீரம்மாள் பரிதாபமாக இறந்தார். மற்றவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

இந்த சம்பவம் குறித்து வீரம்மாளின் கணவர் சேகர் கொடுத்த புகாரின்பேரில் சேதராப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்