< Back
புதுச்சேரி
33 சதவீத இடஒதுக்கீட்டால் 11 பெண்கள் எம்.எல்.ஏ. ஆகும் வாய்ப்பு
புதுச்சேரி

33 சதவீத இடஒதுக்கீட்டால் 11 பெண்கள் எம்.எல்.ஏ. ஆகும் வாய்ப்பு

தினத்தந்தி
|
19 Sep 2023 4:46 PM GMT

33 சதவீத இடஒதுக்கீட்டால் புதுவையில் 11 பெண்கள் எம்.எல்.ஏ. ஆகும் வாய்ப்பு உள்ளதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

காலாப்பட்டு

33 சதவீத இடஒதுக்கீட்டால் புதுவையில் 11 பெண்கள் எம்.எல்.ஏ. ஆகும் வாய்ப்பு உள்ளதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

கலந்துரையாடல்

புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று ஆலங்குப்பம் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளியை பார்வையிட்டார். ஸ்மார்ட் வகுப்பறையை பார்வையிட்ட அவர், மாணவர்களோடு கலந்துரையாடினார். மேலும் மாணவர்களுக்கு மதிய உணவினையும் பரிமாறினார்.

அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

11 பெண் எம்.எல்.ஏ.க்கள்

பெண்களுக்கு சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க பிரதமர் முடிவெடுத்துள்ளார். இது பெண்கள் பொதுவாழ்க்கைக்கு வர உதவியாக இருக்கும்.

இந்த இடஒதுக்கீடு நடைமுறைக்கு வரும்போது, புதுவை மாநிலத்தில் 11 பெண் எம்.எல்.ஏ.க்களும், தமிழகத்தில் 77 பெண் எம்.எல்.ஏ.க்களும், 13 பெண் எம்.பி.க்களும் இருப்பார்கள்.

10 சதவீத இடஒதுக்கீடு

கவர்னர் உண்மையாக மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்று அடிப்படையில் என்னிடம் வரும் கோப்புகள், அதிகாரிகளிடம் இருந்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில்தான் சிலவற்றை தெரிவிக்கிறேன். அதற்காக பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை. குடும்ப தலைவிகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் நல்ல எண்ணத்தோடு தொடங்கப்பட்டு நடை முறைப்படுத்தப்பட்டு உள்ளது.அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் மிகவும் கடுமையாக முயற்சித்து மருத்துவ கல்வியில் 10 சதவீத இடஒதுக்கீட்டை பெற்றுள்ளோம். அதற்காக நன்றி தெரிவித்து பிரதமருக்கு மாணவிகள் கடிதமும் எழுதியுள்ளனர்.

தெலுங்கானா மாளிகை

தெலுங்கானா கவர்னர் மாளிகையில்கூட அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் திறன் மேம்பாட்டு பயிற்சி நடக்க உள்ளது. கல்வி சாரா செயல்பாடுகளில் விளையாட்டு, கலை, பண்பாடு ஆகியவற்றில் மாணவர்களுடைய திறமையை மேம்படுத்துவதற்காகவும், மற்ற குழந்தைகளை ஊக்கப்படுத்துவதற்கும் எல்லா விதத்திலும் உறுதுணையாக இருப்பதற்கும், பொது போட்டிகளில் அவர்கள் கலந்துகொள்ள உதவி செய்யும் நோக்கத்தில் இந்த திட்டத்தை தொடங்குகிறோம்.

அரசு ஆஸ்பத்திரிகளும், அரசு பள்ளிகளும் சாமானிய மக்களுக்கு பலன்தர வேண்டும் என்பதுதான் என்னுடைய அடிப்படையான ஆசை.

இவ்வாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

மேலும் செய்திகள்