< Back
புதுச்சேரி
மாகி, ஏனாமில் கொரோனா தொற்று இல்லை
புதுச்சேரி

மாகி, ஏனாமில் கொரோனா தொற்று இல்லை

தினத்தந்தி
|
29 Aug 2022 4:36 PM GMT

புதுச்சேரியில் கொரோனா தொற்று 30 பேருக்கு உறுதியானது, மாகி, ஏனாமில் கொரோனா தொற்று இல்லை.

புதுச்சேரி

புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 296 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 30 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி யானது. புதுவையில் 26 பேரும், காரைக்காலில் 4 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே வேளையில் மாகி, ஏனாமில் தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை.

இதுவரை 23 லட்சத்து 79 ஆயிரத்து 542 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 1 லட்சத்து 72 ஆயிரத்து 784 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 23 பேர் குணமடைந்தனர். தற்போது ஆஸ்பத்திரிகளில் 13 பேர், வீடுகளில் 329 பேர் என 342 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.

தொற்று பரவல் 10.14 சதவீதமாகவும், குணமடைவது 98.66 சதவீதமாகவும் உள்ளது. நேற்று கொரோனா தடுப்பூசி முதல் தவணையை 115 பேரும், 2-வது தவணையை ஆயிரத்து 240 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 3 ஆயிரத்து 886 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 20 லட்சத்து 53 ஆயிரத்து 9 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்