< Back
புதுச்சேரி
தொழிலாளி இரும்பு கம்பியால் தாக்கப்பட்டார்
புதுச்சேரி

தொழிலாளி இரும்பு கம்பியால் தாக்கப்பட்டார்

தினத்தந்தி
|
30 Sep 2023 4:30 PM GMT

காரைக்காலில் கழிவுநீர் செல்வதில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை இரும்பு கம்பியால் தாக்கியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரைக்கால்

காரைக்கால் காட்டுநாயக்கன் தெருவைச் சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 40). தொழிலாளி. இவரது பக்கத்து வீட்டை சோ்ந்தவா் காவேரி. இவரது வீட்டின் கழிவுநீா் ராஜசேகா் வீடு அருகில் தேங்கி நின்றதாக தொிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜசேகா், காவோியிடம் தட்டிக்கேட்டாா். இதனால் அவா்களிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த காவோியின் உறவினா் ஆனந்த் என்பவா் திடீரென்று ராஜசேகரை இரும்பு கம்பியால் தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அவா் காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் காரைக்கால் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்