< Back
புதுச்சேரி
செல்போன் திருடிய வாலிபர் கைது
புதுச்சேரி

செல்போன் திருடிய வாலிபர் கைது

தினத்தந்தி
|
3 July 2022 4:35 PM GMT

சேதராப்பட்டில் வடமாநில தொழிலாளர்களிடம் செல்போன் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சேதராப்பட்டு

ஒடிசாவை சேர்ந்தவர் சக்கரதார் சேதி (வயது 37). இவர் கடந்த 2 மாதமாக புதுவை சேதராப்பட்டில் சிவானந்தம் என்பவரது வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்து, அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடன் 4 பேர் தங்கி உள்ளனர்.

சம்பவத்தன்று சக்கரதார் சேதி, அவருடன் தங்கியுள்ள ரபிந்திரோ ஆகியோர் தங்கள் செல்போன்களை சார்ஜ் போட்டிருந்தனர். இதனை ஒருவர் திருடிக்கொண்டு தப்பியோட முயன்றார். இதை கண்ட சக்கரதார் சேதி அங்கிருந்தவரின் உதவியுடன் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.

விசாரணையில் அவர் ஒடிசாவை சேர்ந்த வாலிபர் சுவாதி (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். செல்போனையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்