< Back
புதுச்சேரி
கஞ்சா விற்ற வாலிபர் கைது
புதுச்சேரி

கஞ்சா விற்ற வாலிபர் கைது

தினத்தந்தி
|
11 April 2023 4:29 PM GMT

திரு-பட்டினம் அருகே எல்லையம்மன் கோவில் தெருவில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

காரைக்கால்

திரு-பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் எல்லையம்மன் கோவில் தெருவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், திரு-பட்டினம் போலகம் பகுதியை சேர்ந்த மணிச்சோழன் (வயது32) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்