< Back
புதுச்சேரி
ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை
புதுச்சேரி

ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை

தினத்தந்தி
|
5 Jun 2022 10:40 PM IST

வில்லியனூர் பகுதியில் வெடி‌குண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்று ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். மேலும் ரவுடிகளை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வில்லியனூர்

வில்லியனூர் பகுதியில் வெடி‌குண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்று ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். மேலும் ரவுடிகளை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெடிகுண்டு கலாசாரம்

புதுச்சேரியில் சமீப காலமாக வெடிகுண்டு கலாசாரம் தலை தூக்கி உள்ளது. வெடிகுண்டு வீசி எதிரிகளை தீர்த்துக்கட்டும் சம்பவம் அரங்கேறி வருகிறது. இதையடுத்து ரவுடிகளின் கொட்டத்தை அடக்க போலீசார் திரிசூலம் என்ற பெயரில் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதன்பேரில் போலீசார் ரவுடிகளின் வீடுகளில் அடிக்கடி சோதனை செய்து வருகின்றனர். மேலும் அவர்களது வீடுகளில் வெடிகுண்டு, பயங்கர ஆயுதங்கள் எதுவும் பதுக்கி வைத்துள்ளார்களா? என்றும் சோதனை செய்கின்றனர்.

ரவுடிகளின் வீடுகளில் சோதனை

இந்தநிலையில் மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் தலைமையில் வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, முருகன் மற்றும் அதிரடிப்படை போலீசார் இன்று அதிகாலையில் வில்லியனூர், கணுவாப்பேட்டை, உத்திரவாகினிபேட், பெரியபேட், புதுப்பேட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது வீடுகளில் வெடிகுண்டுகள் எதுவும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என வெடிகுண்டு நிபுணர்களுடன் சோதனை செய்யப்பட்டது. இருப்பினும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. மேலும் குற்ற வழக்குகள் தொடர்புடைய 5 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் அதிரடி சோதனை காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்