< Back
புதுச்சேரி
பெயிண்டருக்கு கொலைமிரட்டல்
புதுச்சேரி

பெயிண்டருக்கு கொலைமிரட்டல்

தினத்தந்தி
|
3 July 2023 4:42 PM GMT

அரியாங்குப்பம் அருகே பெயிண்டருக்கு கொலைமிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அரியாங்குப்பம்

அரியாங்குப்பம் சண்முகம் நகர் ராம்சிங் வீதியைச் சேர்ந்தவர் மோகன் (வயது 23). பெயிண்டர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பரணி என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று அன்னை இந்திரா நகர் சந்திப்பில் மோகன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பரணி, மோகனிடம் தகராறு செய்து கத்தியை காட்டி கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்