< Back
புதுச்சேரி
புதுச்சேரி
பிளாட்பாரத்தில் ஆண் பிணம்
|19 July 2023 5:31 PM GMT
புதுவையில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிளாட்பாரத்தில் பிணமாக கிடந்தார்.
புதுச்சேரி
புதுவை ஒயிட் டவுன் துய்ப் வீதி பிளாட்பாரத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. அவரது வலது முழங்காலில் வெள்ளை தழும்பும், நெற்றியில் பழைய காயவடுவும் உள்ளது. அவர் நீலம்-வெள்ளை நிற கட்டம்போட்ட அரைக்கை சட்டையும், சிவப்பு, மஞ்சள் நிற கரை வேட்டியும் அணிந்திருந்தார். இது குறித்து பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.