< Back
புதுச்சேரி
அரசுப் பள்ளி மாணவிகளின் நாட்டு நலப்பணி திட்டமுகாம்
புதுச்சேரி

அரசுப் பள்ளி மாணவிகளின் நாட்டு நலப்பணி திட்டமுகாம்

தினத்தந்தி
|
9 Aug 2023 5:06 PM GMT

பாகூர் கஸ்தூரிபாய் காந்தி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட முகாமில் மாணவிகள் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

பாகூர்

பாகூர் கஸ்தூரிபாய் காந்தி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள், துணை முதல்வர் கலியமூர்த்தி, தலைமையாசிரியர் வாணி ஆகியோர் மேற்பார்வையில் பாகூர் பனைச்சாலை குளக்கரையில் மரக்கன்றுகளை நடவு செய்தனர். முனைவர் வெற்றிவேல் வாழ்த்தி பேசினார். திட்ட அலுவலர் மரி ஆரோக்கியம் கிளாண்டின், விரிவுரையாளர் அகிலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முகாமில் 50-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை வட்டார வளர்ச்சி அலுவலகப் பணியாளர் ரதிபாலன் செய்திருந்தார்.

மேலும் செய்திகள்