< Back
புதுச்சேரி
திருபுவனையில் உழவர் சந்தை
புதுச்சேரி

திருபுவனையில் உழவர் சந்தை

தினத்தந்தி
|
7 July 2022 5:53 PM GMT

திருபுவனையில் உழவர் சந்தை அமைக்கவேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

திருபுவனை

திருபுவனையில் புதுச்சேரி- விழுப்புரம் சாலையோரத்தில் வியாபாரிகள் தரையில் கடைவிரித்து காய்கறிகள், பழங்கள், கீரை, மளிகை பொருட்களை விற்பனை செய்தார்கள். இதில் இருந்து கிடைக்கும் சொற்ப வருமானத்தின் மூலம் தங்களது குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் புதுச்சேரி- விழுப்புரம் இடையே சாலை விரிவாக்கப் பணியால் தரைக்கடைகள் வைக்க முடியாமல் வியாபாரிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் ஆங்காங்கே சென்று வியாபாரம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சிறு வியாபாரிகள் நலன் கருதி திருபுவனை பகுதியில் உழவர்சந்தை அமைக்க அரசு முன்வர வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்