< Back
புதுச்சேரி
பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்
புதுச்சேரி

பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்

தினத்தந்தி
|
1 April 2023 4:55 PM GMT

சின்னபாபு சமுத்திரத்தில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கண்டமங்கலம்

கண்டமங்கலம் அருகே உள்ள சின்னபாபு சமுத்திரத்தில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த மாதம் 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. தொடர்ந்து தினமும் அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 30-ந் தேதி திருக்கல்யாண நிகழ்வு நடைபெற்றது. முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நேற்று இரவு நடைபெற்றது. நிகழ்ச்சியில் பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக் கடனை செலுத்தினர். கோவில் விழாவையொட்டி, கண்டமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்