< Back
புதுச்சேரி
அக்கா கணவரை தாக்கிய மைத்துனர்கள் மீது வழக்கு
புதுச்சேரி

அக்கா கணவரை தாக்கிய மைத்துனர்கள் மீது வழக்கு

தினத்தந்தி
|
1 Aug 2023 3:55 PM GMT

கோட்டுச்சேரியில் அக்கா கணவரை தாக்கிய மைத்துனர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோட்டுச்சேரி

மயிலாடுதுறை மாவட்டம் எருக்கட்டாஞ்சேரியைச் சேர்ந்தவர் டேனியல் துரைசாமி (வயது 42). தச்சு தொழிலாளி. இவரது மனைவி பத்மா (38). இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் பத்மாவுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து காரைக்கால் கீழக்காசாக்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தனது மனைவியை டேனியல் துரைசாமி சேர்த்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதை அறிந்த பத்மாவின் சகோதரர்கள் எருக்கட்டாஞ்சேரியை சேர்ந்த பிரபாகரன், சேகர் ஜீவானந்தம் ஆகியோர், தங்களிடம் சொல்லாமல் எப்படி எங்கள் அக்காவை ஆஸ்பத்திரியில் சேர்க்கலாம் என்று கூறி டேனியல் துரைசாமியிடம் தகராறு செய்தனர்.

இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சகோதரர்கள், அக்கா கணவர்என்று பாராமல் டேனியல் துரைசாமியை தாக்கினர். இதில் அவருக்கு காதில் இருந்து ரத்தம் வந்தது. உடனடியாக அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து அவர் கோட்டுச்சேரி போலீசில் புகார் அளித்தார்.அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்