< Back
புதுச்சேரி
மளிகை கடைக்காரரை தாக்கி கொலை மிரட்டல்
புதுச்சேரி

மளிகை கடைக்காரரை தாக்கி கொலை மிரட்டல்

தினத்தந்தி
|
29 July 2023 4:57 PM GMT

புதுவயைில் மளிகை கடைக்காரரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

புதுச்சேரி

புதுவை பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது60). இவர் வீட்டிலேயே மளிகை கடை நடத்தி வருகிறார். அவரது கடைக்கு பக்கத்து தெருவை சேர்ந்த ராஜா (20) என்பவர் பொருள் வாங்க சென்றார். அப்போது பொருள் வாங்குவது தொடர்பாக பாண்டியராஜன், ராஜா இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜா, பாட்டிலால் பாண்டியராஜனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்