< Back
புதுச்சேரி
கத்தியுடன் ரகளை செய்த வாலிபர் கைது
புதுச்சேரி

கத்தியுடன் ரகளை செய்த வாலிபர் கைது

தினத்தந்தி
|
12 Aug 2023 3:30 PM GMT

புதுவையில் கத்தியுடன் ரகளை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

காலாப்பட்டு

புதுச்சேரி-மயிலம் மெயின்ரோட்டில் வாலிபர் ஒருவர் கத்தியுடன் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சேதராப்பட்டு போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், திண்டிவனம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது30) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்