< Back
புதுச்சேரி
9-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
புதுச்சேரி

9-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
8 Jan 2023 6:56 PM GMT

டியூசன் செல்லாததை தந்தை கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

புதுச்சேரி

டியூசன் செல்லாததை தந்தை கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

பள்ளி மாணவன்

முத்தியால்பேட்டை கணேஷ் நகரை சேர்ந்தவர் தசரதன். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி இளவரசி. இவர்களது 2-வது மகன் பாலமுருகன் (வயது 14). புதுவையில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். இவன் புதுவை வள்ளலார் தெருவில் உள்ள ஒரு டியூசன் சென்டரிலும் படித்தான். தினமும் காலை 7 மணிக்கு டியூசன் செல்வது வழக்கம். ஆனால் நேற்று முன்தினம் டியூசனுக்கு பாலமுருகன் செல்லவில்லை. இதனை தசரதன் கண்டித்ததால், கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் இருவரும் வேலைக்கு சென்றுவிட்டனர். பாலமுருகன் மட்டும் வீட்டில் இருந்தான்.

தற்கொலை

இந்த நிலையில் மாலையில் வேலையை முடித்து விட்டு தசரதன் வீட்டிற்கு வந்தார். அப்போது பாலமுருகன் வீட்டின் 2-வது மாடியில் உள்ள மின்விசிறி கொக்கியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து பிணமாக தொங்கியது தெரியவந்தது. இதை பார்த்து அதிர்ச்சி யடைந்த அவர் கதறி அழுதார்.

இது பற்றி தகவல் அறிந்த முத்தியால்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பாலமுருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்