< Back
தேசிய செய்திகள்

தேசிய செய்திகள்
லடாக்கில் லேசான நிலநடுக்கம்: ரிக்டரில் 3.6 ஆக பதிவு

24 March 2025 6:33 AM IST
லடாக்கில் இன்று காலை 4.32 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஸ்ரீநகர்,
லடாக்கில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 4.32 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 34.35 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 78.06 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. முன்னதாக, நேற்று காலை டெல்லி மற்றும் பீகார் மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.