< Back
தேசிய செய்திகள்
100வது ராக்கெட்டை ஏவும் பணிகளில் இஸ்ரோ.. கவுன்ட் டவுன் தொடங்கியது
தேசிய செய்திகள்

100வது ராக்கெட்டை ஏவும் பணிகளில் இஸ்ரோ.. கவுன்ட் டவுன் தொடங்கியது

தினத்தந்தி
|
28 Jan 2025 7:23 AM IST

ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான 25 மணி நேர கவுண்டவுன் இன்று அதிகாலை தொடங்கியது.

சென்னை,

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஜி.எஸ்.எல்.வி. எப்-15 ராக்கெட் மூலம் என்.வி.எஸ்-02 என்ற செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்த உள்ளது. இதன் மூலம் இஸ்ரோ, தனது 100-வது செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தி வரலாறு படைக்க தயாராகி வருகிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து நாளை காலை 6.23 மணிக்கு ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

இந்த ராக்கெட்டுக்கான இறுதிக்கட்டப்பணியான 25 மணி நேர கவுன்ட் டவுன் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 5.23 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

என்.வி.எஸ்-02 செயற்கைக்கோள், மற்ற செயற்கைக்கோள்களுடன் சேர்ந்து தரை, கடல், வான்வெளி போக்குவரத்தை கண்காணித்து, பேரிடர் காலங்களில் துல்லியத் தகவல்களை தெரிவிக்கும் எனவும், ராக்கெட் விண்ணில் ஏவ தயார் நிலையில் உள்ளது என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

மேலும் செய்திகள்