< Back
தேசிய செய்திகள்
கார்-ஆட்டோ நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி
தேசிய செய்திகள்

கார்-ஆட்டோ நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி

தினத்தந்தி
|
9 July 2024 7:00 AM GMT

கார்-ஆட்டோ நேருக்கு நேர் மோதிய சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாட்னா,

பீகார் மாநிலம் எப்சிஐ போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பெகுசராய் நகரின் ரத்தன் சவுக் பகுதி அருகே கார்-ஆட்டோ நேருக்கு நேர் அதிபயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து இன்று அதிகாலை நடந்ததாக கூறப்படுகிறது.

இந்த கோர விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். மேலும் இச்சம்பவம் பற்றி அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இதையடுத்து இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்