< Back
தேசிய செய்திகள்
ஜம்மு காஷ்மீர்  தேர்தலில் போட்டியிடுவேன்: பரூக் அப்துல்லா
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் தேர்தலில் போட்டியிடுவேன்: பரூக் அப்துல்லா

தினத்தந்தி
|
16 Aug 2024 5:42 PM GMT

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகர்,

ஜம்மு -காஷ்மீருக்கு செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1ஆம் தேதிகளில் மூன்று கட்டங்களாக பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு, ஜம்மு-காஷ்மீர் பேரவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

.சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீருக்கு பேரவைத் தேர்தல் நடக்கவிருப்பதால் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாக முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா கூறியுள்ளார். இது தொடர்பாக பரூக் அப்துல்லா கூறியிருப்பதாவது:- இந்த தேர்தலில் நான் போட்டியிடுவேன், உமர் அப்துல்லா தேர்தலில் போட்டியிட மாட்டார். மாநில அந்தஸ்து கிடைத்ததும் நான் பதவி விலகுவேன், உமர் அப்துல்லா அந்த தொகுதியில் போட்டியிடுவார்" என்றார். .

மேலும் செய்திகள்