< Back
தேசிய செய்திகள்
நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம்
தேசிய செய்திகள்

நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம்

தினத்தந்தி
|
13 Feb 2025 12:10 PM IST

நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுடெல்லி,

கேரள கடலோர மற்றும் வனப்பகுதிகளை சுற்றியுள்ள சமூகங்களை பாதுகாக்கக்கோரி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி செய்தியாளர்களுடன் பேசுகையில்,'வயநாட்டில் வனவிலங்குகளால் இதுவரை 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது மிகவும் கவலைக்குரிய ஒரு சூழ்நிலை . இந்த பிரச்சினையை சரிசெய்ய மத்திய அரசும் மாநில அரசும் வயநாடு தொகுதிக்கு நிதி வழங்க வேண்டும். இந்த பிரச்சினையை மக்களவையில் இன்று எழுப்புவேன் என்று நம்புகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்