< Back
தேசிய செய்திகள்
சண்டிகார் விமான நிலையத்தில் பெண் காவலர் தாக்கியதாக பா.ஜ.க. எம்.பி. கங்கனா ரனாவத் புகார்
தேசிய செய்திகள்

சண்டிகார் விமான நிலையத்தில் பெண் காவலர் தாக்கியதாக பா.ஜ.க. எம்.பி. கங்கனா ரனாவத் புகார்

தினத்தந்தி
|
6 Jun 2024 1:21 PM GMT

சண்டிகார் விமான நிலையத்தில் சி.ஐ.எஸ்.எப். பெண் காவலர் தன்னை தாக்கியதாக பா.ஜ.க. எம்.பி. கங்கனா ரனாவத் புகார் அளித்துள்ளார்.

சண்டிகார்,

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இமாச்சல பிரதேசம் மண்டி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட நடிகை கங்கனா ரனாவத் வெற்றி பெற்றார். இந்த நிலையில் டெல்லியில் நாளை நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்.பிக்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி செல்வதற்காக கங்கனா ரனாவத் இன்று பிற்பகலில் சண்டிகார் விமான நிலையம் வந்தார்.

அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த சி.ஐ.எஸ்.எப். பெண் காவலர் குல்விந்தர் கவுர் என்பவர் கங்கனாவை சோதனை செய்தார். அப்போது குல்விந்தர் கவுர் தன்னை கன்னத்தில் அறைந்ததாக கங்கனா ரனாவத் புகார் அளித்தார். டெல்லியில் வேளாண் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய விவசாயிகளை கங்கனா காலிஸ்தான் ஆதரவாளர்கள் என விமர்சித்திருந்தார். அதற்காக குல்விந்தர் கவுர், கங்கனாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. இது குறித்து உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பெண் காவலர் தன்னை அறைந்ததாக எம்.பியும் நடிகையுமான கங்கனா ரனாவத் உள்துறை அமைச்சகத்தில் புகார் அளித்துள்ளார்.


மேலும் செய்திகள்