< Back
ஆன்மிகம்
மகா கும்பமேளா: திரிவேணி சங்கமத்தில் இதுவரை 39 கோடி பக்தர்கள் புனித நீராடல்

Image Courtesy : AFP

ஆன்மிகம்

மகா கும்பமேளா: திரிவேணி சங்கமத்தில் இதுவரை 39 கோடி பக்தர்கள் புனித நீராடல்

தினத்தந்தி
|
6 Feb 2025 12:46 AM IST

திரிவேணி சங்கமத்தில் இதுவரை 39 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்.

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த 13-ந்தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ந்தேதி வரை மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது.

இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.

இந்நிலையில், இதுவரை சுமார் 39 கோடி பக்தர்கள் கும்பமேளாவிற்கு வருகை தந்து, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். நேற்றைய தினம் பிரதமர் மோடி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். மேலும் பல்வேறு அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் தொர்ந்து கும்பமேளாவிற்கு வருகை தருகின்றனர். மகா கும்பமேளாவுக்கு இந்த வருடம் சுமார் 45 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்