< Back
டென்னிஸ்
விம்பிள்டன் டென்னிஸ்: முன்னாள் நம்பர் 1 வீரர் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

image courtesy:AFP

டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ்: முன்னாள் நம்பர் 1 வீரர் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
4 July 2024 4:37 PM GMT

ஜோகோவிச் 3-வது சுற்று ஆட்டத்தில் அலெக்ஸி பாபிரின் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

லண்டன்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் 1 வீரரான ஜோகோவிச் (செர்பியா), ஜேக்கப் பியர்ன்லி (இங்கிலாந்து) உடன் மோதினார்.

இதில் முதல் 2 செட்டுகளை கைப்பற்றிய நிலையில், 3-வது செட்டை பியர்ன்லி கைப்பற்றி அதிர்ச்சி அளித்தார். மேலும் 4-வது செட்டிலும் ஜோகோவிச்சுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். இருப்பினும் அந்த செட்டை ஜோகோவிச் கைப்பற்றி வெற்றி பெற்றார். இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6-3, 6-4, 5-7 மற்றும் 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இவர் தனது 3-வது சுற்று ஆட்டத்தில் அலெக்ஸி பாபிரின் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.


மேலும் செய்திகள்