< Back
டென்னிஸ்
நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ்; காலிறுதிக்கு முன்னேறினார் ஸ்வெரேவ்

Image Courtesy : AFP

டென்னிஸ்

நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ்; காலிறுதிக்கு முன்னேறினார் ஸ்வெரேவ்

தினத்தந்தி
|
11 Aug 2024 12:26 AM GMT

கனடாவின் டொரண்டோவில் நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.

டொரண்டோ,

கனடாவின் டொரண்டோவில் நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், டென்மார்க்கின் ஹோல்கர் ரூனே உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் ஆரம்ப முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 6-3, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் ரூனேவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் ஸ்வெரேவ், அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டாவை எதிர்கொள்ள உள்ளார்.

மேலும் செய்திகள்