< Back
பிற விளையாட்டு
கடலூரில்    மாவட்ட அளவிலான செஸ் போட்டி
கடலூர்
பிற விளையாட்டு

கடலூரில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி

தினத்தந்தி
|
18 Jun 2022 5:14 PM GMT

கடலூரில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது.


மாமல்லபுரத்தில் ஒலிம்பியாட் செஸ் போட்டி அடுத்த மாதம் (ஜூலை) 28-ந் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இந்த போட்டியை நேரில் காண, ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் 15 வயதுக்குட்பட்ட சிறந்த செஸ் வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்ய மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடலூரில் நேற்று மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது. இதற்கு மாவட்ட சதுரங்க கழக செயலாளர் பாண்டியன் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர், மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா ஆகியோர் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தனர். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். இந்த போட்டி இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் வீரர்கள், மாமல்லபுரத்தில் நடைபெறும் ஒலிம்பியாட் போட்டியை காண தகுதி பெறுவார்கள்.

மேலும் செய்திகள்