< Back
பிற விளையாட்டு
உலக பேட்மிண்டன் போட்டி: இந்திய வீரர் பிரனாய் காலிறுதிக்கு முன்னேற்றம்

image courtesy: BAI Media twitter

பிற விளையாட்டு

உலக பேட்மிண்டன் போட்டி: இந்திய வீரர் பிரனாய் காலிறுதிக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
25 Aug 2022 4:43 PM GMT

27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.

டோக்கியோ,

27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.

இதில் இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய இளம் வீரர் லக்‌ஷயா சென், தரவரிசையில் 18-வது இடத்தில் இருக்கும் மற்றொரு இந்திய வீரரான எச்.எஸ்.பிரனாய் உடன் மோதினார்.

இந்த போட்டியில் பிரனாய் 17-21, 21-16, 21-17 என்ற செட் கணக்கில் லக்‌ஷயா சென்னை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். நாளை நடைபெற உள்ள காலிறுதிப்போட்டியில் பிரனாய், சீன வீரர் ஜாவோ ஜுன்பெங்குடன் மோதுகிறார்.

மேலும் செய்திகள்