< Back
பிற விளையாட்டு
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இறுதி போட்டிக்கு முன்னேறினார் லவ்லினா

Image Tweeted By BFI_official

பிற விளையாட்டு

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இறுதி போட்டிக்கு முன்னேறினார் லவ்லினா

தினத்தந்தி
|
9 Nov 2022 2:53 PM GMT

இந்த தொடரில் இந்தியாவுக்கு ஏற்கனவே 12 பதக்கங்கள் உறுதியாகி இருந்தன.

ஜோர்டான்,

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ஜோர்டானில் நடந்து வருகிறது. இந்த தொடரின் அரையிறுதி போட்டிகள் இன்று தொடங்கியது. இதில் 12 இந்திய வீரர், வீராங்கனைகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளதால் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்யன்ஷிப்பில் இந்தியாவுக்கு ஏற்கனவே 12 பதக்கங்கள் (குறைந்தது வெண்கலப் பதக்கம்) உறுதியாகி இருந்தன.

பெண்களுக்கான அரையிறுதி போட்டி இன்று தொடங்கிய நிலையில் ஆண்களுக்கான அரையிறுதி போட்டி நாளை தொடங்குகிறது. அந்த வகையில் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற லவ்லினா போர்கோஹைன் (75 கிலோ) இன்று கொரிய குடியரசின் சியோங் சுயோனை எதிர்கொண்டார்.

போட்டியின் ஆரம்பத்திலிருந்தே தனது புத்திசாலித்தனமான நுட்பங்களையும் உத்திகளையும் திறம்பட பயன்படுத்திய லவ்லினா இறுதியில் 5-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். இதன் மூலம் அவர் இந்தியாவுக்கு தங்கம் அல்லது வெள்ளி பதக்கத்தை உறுதி செய்துள்ளார். அதே போல் இந்தியாவின் அல்பியா பதான் 81+ கிலோ எடை பிரிவில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். மற்றொரு அரையிறுதி போட்டியில் இந்தியாவின் அங்குஷிதா போரோ (75 கிலோ) தோல்வி அடைந்து வெண்கல பதக்கம் வென்றார்.

ஆடவர் பிரிவில், சிவ தபா (63.5 கிலோ) முகமது ஹுசாமுதீன் (57 கிலோ), நரேந்தர் (92+ கிலோ), சுமித் (75 கிலோ), கோவிந்த் குமார் சஹானி (48 கிலோ) ஆகியோர் நாளை நடைபெறும் அரையிறுதியில் வெற்றி பெற்று இந்தியாவுக்கு தங்கம் அல்லது வெள்ளி பதக்கத்தை உறுதி செய்யும் முனைப்பில் களம் இறங்கவுள்ளனர்.

மேலும் செய்திகள்