< Back
கால்பந்து
ஐ.எஸ்.எல் கால்பந்து: பரபரப்பான போட்டியில் ஜாம்ஷெட்பூரை வீழ்த்தி ஒடிசா அணி திரில் வெற்றி

Image Tweeted By @IndSuperLeague

கால்பந்து

ஐ.எஸ்.எல் கால்பந்து: பரபரப்பான போட்டியில் ஜாம்ஷெட்பூரை வீழ்த்தி ஒடிசா அணி திரில் வெற்றி

தினத்தந்தி
|
11 Oct 2022 5:37 PM GMT

முதல் பாதியில் ஜாம்ஷெட்பூர் 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

ஜாம்ஷெட்பூர்,

11 அணிகள் பங்கேற்றுள்ள 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. அந்த வகையில் ஜாம்ஷெட்பூரில் இன்று நடைபெற்ற போட்டியில் ஜாம்ஷெட்பூர்- ஒடிசா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

போட்டி தொடங்கிய 3-வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் வீரர் டேனியல் சீமா அணியின் முதல் கோலை அடித்தார். அதை தொடர்ந்து 10-வது நிமிடத்தில் போரிஸ் சிங் கோல் அடிக்க, ஜாம்ஷெட்பூர் அணி போட்டியின் தொடக்கத்திலே 2 கோல்களுடன் ஆதிக்கம் செலுத்தியது.

இதற்கு பதில் கோலாக ஒடிசா வீரர் டியாகோ மௌரிசியோ 17-வது நிமிடத்தில் கோல் அடித்தார். அதன் பிறகு முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்காத நிலையில் ஜாம்ஷெட்பூர் 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

பின்னர் தொடங்கிய 2-வது பாதியில் இரு அணியின் டிபென்டர்களும் சிறப்பாக விளையாடினர். போட்டி முடிவதற்கு சில நிமிடங்களே எஞ்சி இருந்த நிலையில் 88-வது நிமிடத்தில் ஒடிசா அணியின் ஐசாக் கோல் அடிக்க போட்டி சமநிலை ஆனது.

இதை தொடர்ந்து ஜாம்ஷெட்பூர் அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் போட்டியின் கூடுதல் நேரத்தில் (91-வது நிமிடம்) டியாகோ தனது 2-வது கோலை அடித்தார். பின்னர் ஜாம்ஷெட்பூர் கோல் அடிக்காத நிலையில் ஒடிசா அணி 3-2 என்ற கோல் கணக்கில் திரில் வெற்றி பெற்றது.

மேலும் செய்திகள்